பல்லவர்களின் தளபதியாக இருந்தவர் பரஞ்சோதி. இவர் சாளுக்கிய மன்னன் புலிகேசிமீது படையெடுத்துச் சென்று வெற்றிப்பெற்றார். பின்னர் தமிழ்நாட்டுக்குத் திரும்பும்போது வாதாபியிலிருந்து ஒரு கணபதி சிலையை பரஞ்சோதி கொண்டுவந்து வழிபட்டார். அதுவே வாதாபி கணபதி என்று பெயர் பெற்றது.