மாசி பங்குனி திருவிழா; அம்மன் உருவம் பொறித்த வண்ண தீச்சட்டிகள்... தயாரிப்பு பணி தீவிரம்



காரைக்குடி; கோட்டையூரில், மாசி பங்குனி திருவிழாவையொட்டி அம்மன் உருவம் பொறித்த வண்ண வண்ண தீச்சட்டிகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.


தமிழகத்தில் மாசி பங்குனி தொடங்கினாலே அம்மன் கோவில்களில் திருவிழாக்களும் தொடங்கிவிடும். அம்மன் கோயில்களில் பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும் தீ மிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர். காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இத்திருவிழாவின் போது லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும் பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர். பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான தீச்சட்டி தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், கோட்டையூர் பகுதியில் இவ்வாண்டு பக்தர்களுக்கு புதிதாக தீச்சட்டிகளில் அம்மனின் உருவத்தை தத்துரூபமாக அமைத்து வண்ண வண்ண நிறங்களில் தீச்சட்டி தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


வியாபாரி பாண்டி கூறுகையில்; பொதுவாக மாசி பங்குனி திருவிழாக்களுக்கு தீச்சட்டி விற்பனை அதிக அளவில் இருக்கும். வழக்கமாக தீச்சட்டிகளில் அம்மன் உருவம் தெளிவாக இருப்பதில்லை. பக்தர்கள் பலர் அம்மன் உருவம் தெளிவாக இருக்க கோரிக்கை விடுத்தனர். அதன்படி தெளிவான அம்மன் உருவம் பதித்து, வண்ண வண்ண நிறங்களில் தீச்சட்டி தயாரித்து வருகிறோம். முதன்முறை தீச்சட்டி எடுப்பவர்கள் 3 முகம் வைத்து எடுப்பார்கள். 5 முகம் முதல் 16 முகம் வரையிலான தீச்சட்டி உள்ளது. ரூ. 101 முதல் 300 வரை விற்பனை செய்யப்படுகிறது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்