திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில்களில், உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. மொத்தம், 5 லட்சத்து 16 ஆயிரத்து 930 ரூபாய் ரொக்கம், 11 கிராம் தங்கம், 300 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. வீரராகவ பெருமாள் கோவிலில் உண்டியலில், 6 லட்சத்து 39 ஆயிரத்து 691 ரூபாய் ரொக்கம், 21 கிராம் தங்கம், 182 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்ததாக, அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.