மாசி மாத கடைசி சனி; புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ பூஜை



திட்டக்குடி; மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ பூஜை நடந்தது. இதையொட்டி, இன்று காலை 6:30 மணியளவில் மூலவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 7:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. 7:30 மணியளவில், கோவில் பிரகாரத்தில் அலங்கரிக்கப்பட்ட பசுவுக்கு கோ பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்