பதிவு செய்த நாள்
13
டிச
2019
02:12
சேலம்: ’சகஸ்ர தீப’ அலங்காரத்தில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சவுந்தரராஜர் காட்சியளித்தார். திருக்கார்த்திகை தீபத்திருவிழா, திருவண்ணாமலை உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களில், கார்த்திகை நட்சத்திரத்தில், கடந்த, 10ல் நடந்தது. நேற்று முன்தினம் (டிசம்., 11ல்), சர்வாலய தீபம், ’வைகானச’ ஆகம முறைப்படி, சில பெருமாள் கோவில்களில், கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
’பாஞ்சராத்ர’ ஆகம முறைப்படி, சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், நேற்று (டிசம்., 12ல்), விஷ்ணு தீபம் வைத்து, கோவில் கோபுரத்தில் திருக்கோடி ஏற்றி, ’சொக்கப் பனை’ கொளுத்தப்பட்டது. சிறப்பு பூஜைக்கு பின், அர்த்த மண்டபத்தில், 1,008 தீபங்களால் அலங் கரிக்கப்பட்ட, ’சகஸ்ர தீப’ ஊஞ்சலில், ஸ்ரீதேவி, பூதேவியுடன், சர்வ அலங்காரத்தில் சவுந்தர ராஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள், பக்தி பாடல்களை பாடி தரிசனம் செய்தனர்.