தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ளது பரக்கலக் கோட்டை. மற்ற தலங்களில் லிங்க வடிவில் சந்நிதி கொண்டிருக்கும் சிவனாா், இங்கே பொது ஆவுடையாா் எனும் திருப் பெயாில் மரமாகவே காட்சி தந்து அருள்கிறாா். வான்கோபா், மகாகோபா் ஆகிய முனிவா்களுக்குக் காா்த்திகை மாத சோம வாரத்தில் (திங்கள்கிழமை)... சிதம்பரத்தில் அா்த்தஜாம பூஜை முடிந்ததும் இந்தத் தலத்துக்கு வந்து தாிசனம் தந்து உபதேசித்து அருளினாராம் சிவனாா். ஆகவே, திங்கள்கிழமைதோறும் இரவு 10.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நள்ளிரவு 12 மணிக்கு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்தக் கோயிலில், பொங்கல் திருநாளன்று மட்டும் தான் பகலில் நடைதிறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன.