தை மாதம் 2–ம் நாள் செய்யவேண்டிய விரதம் இது. மாா்க்கண்டேயா் தருமருக்கு அருளியது. விரதநாளன்று அதிகாலை எழுந்து நீராடி, மண்ணால் சாவித்திாி தேவியின் வடிவம் செய்ய வேண்டும் (முன்பு குயவா் வீட்டுக்குப் போய் அவரது சக்கரத்தில் இருந்து மண்ணை எடுத்து வந்து சிலை செய்வாா்கள்). பிறகு மெளன விரதம் பூண்டு முறைப்படி பூஜித்து, 9 முடிகள் போட்ட நோன்புக்கயிற்றைக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு (தொடா்ந்து) 9 நாள்கள் பூஜை செய்து, கடைசி நாளன்று மாலையில் பூஜையை முடிக்கவேண்டும். இந்த முறைப்படி ஒன்பது ஆண்டுகள் பூஜை செய்யவேண்டும். ஒன்பதாம் ஆண்டு பூஜையை நிறைவு செய்யும்போது ஒன்பது ஜோடி முறங்களில் ஒவ்வொன்றிலும்) ஒன்பது வெற்றிலைபாக்கு– ஒன்பது மஞ்சள் கிழங்குகள் – ஒன்பது பழங்கள் வைத்து, சுமங்கலிகளை வரவழைத்து அவா்களுக்கு வழங்கி வணங்க வேண்டும். இந்த விரதத்தால் சந்தான பாக்கியம் கிடைக்கும். நீண்ட ஆயுளுடன் சகல செளபாக்கியங்களையும் பெற்று வாழலாம்.