* அனைவர் மீதும் கடவுள் கருணை மழை பொழிகிறார். அதை நனைந்து மகிழுங்கள். அது வேண்டும், இது வேண்டும் என கடவுளிடம் கேட்காதீர்கள். * உலகிலுள்ள அனைவரும் பொம்மைகளைப் போல கடவுளின் கையில் இருக்கிறோம். அவர் எப்படி வைத்தாலும் அதை ஏற்று மகிழ்வோம். * தன்னம்பிக்கை மனதில் இருந்தால் உலகிலுள்ள எல்லா நல்ல விஷயங்களும் உங்களை நோக்கி வரத் தொடங்கும். * யாரும் நமக்கு அந்நியமானவர் அல்ல. அன்பினால் உலகம் முழுவதையும் சொந்தமாக்குங்கள். * மனம் அமைதி பெற விரும்பினால், பிறரைக் குறை சொல்லாதீர்கள். மாறாக உங்கள் மீதுள்ள குறைகளைப் போக்க முயலுங்கள். * கடவுள் மீது பக்தி செலுத்தினால் துன்பம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. கடவுளை நேசிப்பவரே புண்ணியவான். * சோம்பலால் உடலும், மனமும் சீர்கெட்டு விடும். எப்போதும் சுறுசுறுப்புடன் பயனுள்ள பணிகளில் ஈடுபடுங்கள். * நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அதற்குரிய பலனை கொடுத்தே தீரும். அதற்குரிய சூழ்நிலையும் உங்களை நோக்கி வந்து விடும். * ஆர்வமுடன் கடமையாற்றுங்கள். இருந்தாலும் பிரார்த்தனை செய்ய தினமும் சிறிது நேரமாவது ஒதுக்குங்கள்.