குஜராத் மாநிலத்தில், பரோடாவில் மத்துவார் என்ற ஏரியில் முதலைகள் அதிகம். இங்கு முதலைக்கு சிலை அமைத்து கோயில் கட்டி கடவுளாக வழிபடுகின்றனர். நேர்த்திக் கடன் செய்கின்றனர். முதலையால் மனிதர்களுக்கு காயங்கள் ஏற்பட்டாலும்கூட வருந்தாமல் அது தெய்வ சம்பந்தமானது என்று சந்தோஷம் கொள்கின்றனர். அதேபோல் குஜராத்தின் சதாதர் என்ற ஊரில் இறந்த எருமை ஒன்றிற்கு சமாதி அமைத்து, அதற்கு அருகில் சிலை வைத்து வழிபடுகின்றனர். பிள்ளைப்பேறு, திருமணம் போன்ற சுபகாரியங்களுக்காக அந்த எருமை சிலை முன்பு வேண்டுகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் கால்நடைகளை நேர்ச்சையாக கோயிலுக்கு அளித்து நன்றி செலுத்துகின்றனர்.