திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வீடுகளில் வேல் பூஜை, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து மக்கள் வழிபட்டனர்.கருப்பர் கூட்டம் என்ற அமைப்பை கண்டித்து, வீடுகளில் வேல் பூஜையும், கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்ய ஹிந்து அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தனர். இதன்படி, திண்டுக்கல்லில் இந்து முன்னிணி கோட்ட செயலாளர் சங்கர் கணேஷ் தலைமையில் பொதுமக்கள் ஒன்றிணைந்து தங்கள் வீடுகள், கோவிலில் வேல் கோலமிட்டு விளக்கேற்றி பூஜைகள் செய்து, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்தனர். பழநியிலும் ஏராளமானோர் வீடுகளின் முன் வேல் கோலமிட்டு, வேல் வைத்து பூஜை செய்தனர். குழந்தைகளுக்கு முருகன் வேடமிட்டு கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்தனர்.