ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2020 11:08
கோவை: ஆடி கடைசி வெள்ளியையொட்டி, கோவை அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கோவை, பெரிய கடை வீதி, மாகாளியம்மன் கோவில், ராயபுரம் தண்டு மாரியம்மன் கோயில்களில் ஆடி கடைசி வெள்ளியையொட்டி நடைபெற்ற வழிபாட்டில் சிறப்பு அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். செல்வபுரம், எல்.ஐ.சி., காலனி ஸ்ரீ எல்லை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆடி கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். கோவில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்றனர். இவ்விழாவில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.