பதிவு செய்த நாள்
31
அக்
2020
05:10
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில் நடத்தப்படும், தமிழ் ஸ்லோகம், திருப்புகழ் வகுப்புகள், இன்று முதல், ஆன்-லைன் வாயிலாக துவக்கப்படுகின்றன. இதில், பங்கேற்க ஆர்வமுள்ள சிறார்கள் வரவேற்கப்படுகின்றனர்.இளம் சிறார்கள் ஆன்மிக பக்தியுடன், நல்லொழுக்கங்களை கற்று வளர வேண்டும் என்ற நோக்கத்தில், சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில், தமிழ் ஸ்லோகம், திருப்புகழ் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.பத்து வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு, நான்கு பகுதிகளாக, ஓராண்டிற்கு, ஸ்லோகம், திருப்புகழ், நல்லொழுக்க சிந்தனைகள், சாஸ்திர- விஞ்ஞான பிணைப்பு உள்ளிட்ட வகுப்புகள், நடத்தப்பட்டு வந்தன.ஆண்டிற்கு, 500 சிறுவர் - சிறுமியருக்கு ஆன்மிக வகுப்புகள் நடத்தி, நல்லொழுக்கத்தை வளர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இந்த ஆன்மிக பயிற்சி, ௨௦௧௯ மே மாதம் துவங்கி, மூன்று, பேட்ச் நிறைவு பெற்று உள்ளது.இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த வகுப்புகள், தற்போது, கூகுள் மீட் வழியாக, ஆன்-லைன் வகுப்புகளாக, இன்று முதல் துவக்கப்படுகின்றன. இந்த பயிற்சி வகுப்பில், தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என நினைக்கும் பெற்றோர், வடபழநி ஆண்டவர் கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, தகவல்களை பெறலாம்.