பதிவு செய்த நாள்
25
நவ
2020
12:11
சென்னை : சென்னை, குரோம்பேட்டை, சத்ய சாய் இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேரில், சத்ய சாய் பாபாவின், 95வது பிறந்த நாள் நிகழ்ச்சி, சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பகவான் சத்யசாய் பாபாவின், 95வது ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை, குரோம்பேட்டை, சத்ய சாய் இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேரில், ஐந்து நாட்கள் நடந்த பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில், மகளிர் தினம், சர்வ தர்ம வழிபாடு, கிராம சேவை, முதியோர் இல்ல சேவை, லட்சார்ச்சனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.பள்ளி மாணவர்கள், தீபாவளி பண்டிகையின்போது, பட்டாசுகளை வாங்காமலும், ஆடை, இனிப்பு, உணவு ஆகியவற்றில், வீண் செலவு செய்யாமலும் சேமித்து வைத்த பணத்தை, கிராம சேவை நிகழ்ச்சிக்கு நன்கொடையாக வழங்கினர். அந்த நிதியின் மூலம், நன்மங்கலம் கிராமத்தில் உள்ள முதியோர் இல்லத்திற்கு, அன்னதானம், லட்டு மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டன. நவ., 23ம் தேதி நடந்த நிகழ்ச்சியில், சாய்பாபாவின் ஆழ்ந்த பக்தர்கள் வாஞ்சிநாதன் மற்றும் பவானிவாஞ்சிநாதன் ஆகியோர், சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியில், சாய் பக்தி குறித்த நடனம் அரங்கேறியது. மேலும், பெற்றோரை பேணுதல் மற்றும் சாய் பாபாவின் மகிமை ஆகிய தலைப்புகளில் உரையாற்றினர். நிகழ்ச்சியில், பள்ளி இயக்குனர் குமாரசாமி வரவேற்றார்.