வேலூர், சேண்பாகத்தில் அமைந்துள்ளது செல்வ விநாயகர் திருக்கோயில். இக்கோயிலில் சக்தி வாய்ந்த 11 கணபதி மூர்த்தங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஓம்கார வடிவத்தில் எழுந்தருளியிருப்பது சிறப்பு. 11 கணபதி சுயம்பு மூர்த்தங்கள் ஒன்றாக அமைந்திருப்பது இங்கு மட்டுமே. துக்கோஜி என்ற மகாராஷ்டிர மந்திரியால் கட்டப்பட்ட இக்கோயிலில் அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானை சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து, தீபம் ஏற்றி வழிபட தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.