பதிவு செய்த நாள்
27
நவ
2020
10:11
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், கிருத்திகை தீபம் ஏற்றுவதற்கு, பக்தர்களிடம் இருந்து நெய் சேகரிக்க பாத்திரம் வைக்கப்பட்டுள்ளது.திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. அப்போது, மலைக்கோவில் மாடவீதியில், சொக்கப்பனையில் நெய் தீபம் ஏற்றப்படும்.பின், கோவில் எதிரில் உள்ள பச்சரிசி மலையில், 100 கிலோ நெய் தீபம் ஏற்றப்படும்.இந்த தீபத்தை பார்த்தவுடன், திருத்தணி நகர மக்கள் தங்களது வீடுகளில், தீபம் ஏற்றி வழிபடுவர்.நடப்பாண்டிற்கான கார்த்திகை தீபம், வரும், 29ம் தேதி நடக்கிறது.கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அதிகளவில் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில், மாடவீதியில் ஏற்றப்படும் சொக்கப்பனை தீபம் மலைக்கோவில் மயில் மண்டபம் அருகில் ஏற்றப்பட உள்ளது.இதில், பக்தர்கள் பங்கேற்ற அனுமதிஇல்லை. ஆனால், வழக்கம் போல் பச்சரிசி மலையில் நெய் தீபம் ஏற்றப்படும். நெய் தீபம் ஏற்றுவதற்கு, பக்தர்களிடம் நெய் காணிக்கை பெற வசதியாக, கோவில் நுழைவு வாசலில் பாத்திரம் வைக்கப்பட்டுள்ளது.