உளுந்தூர்பேட்டை: எலவனசூர் கோட்டை அடுத்த கீழப்பாளையத்தில் உள்ள ரதி-மன்மதன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு முதல் கால பூஜையும், இரவு 8 மணிக்கு இரண்டாம் கால பூஜையும் நடந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு கோ பூஜையும் நடந்தது. தொடர்ந்து 7.45 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.