சித்தர் முத்துவடுகநாதர் இல்லத்தில் வராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2021 04:07
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுகநாதர் வாழ்ந்த இல்லத்தில் வராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
சிங்கம்புணரியில் 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து தனது சித்துகள் மூலம் மக்களுக்கு அருள்புரிந்த சித்தர் முத்துவடுகநாதர், தான் மேலத்தெருவில் வாழ்ந்த வீட்டில் வராஹி அம்மன் வழிபாடு நடத்தி வந்தார். நகருக்கு வடக்கே அவர் ஜீவசமாதி அடைந்த இடத்தில் அங்கு கோயில் எழுப்பப்பட்டு வழிபாடுகள் நடக்கிறது. அவர் வாழ்ந்த மேலத்தெரு இல்லத்தில் அவர் நடத்தி வந்த வராகி அம்மன் வழிபாடு இன்றும் தொடர்ந்து நடக்கிறது. இன்று அங்கு வராகி அம்மன் வருடாந்திர சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 10:00 மணிக்கு ஐம்பொன்னால் ஆன வராகி அம்மனுக்கு 32 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை சித்தர் முத்துவடுகநாதரின் வாரிசுதாரர்கள், வராகியம்மன் உபாசகர்கள், சிங்கம்புணரி கிராமத்தார்கள் செய்திருந்தனர்.