Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தினமலர் நாளிதழுக்கு ஸ்ரீசாரதா ... திருமுருகன்பூண்டியில் தயாரான 42 அடி உயர ஆஞ்சநேயர் சிலை திருமுருகன்பூண்டியில் தயாரான 42 அடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மைசூரு தசரா விழாவில் பங்கேற்க யானைகள் புறப்பட்டன
எழுத்தின் அளவு:
மைசூரு தசரா விழாவில் பங்கேற்க யானைகள் புறப்பட்டன

பதிவு செய்த நாள்

14 செப்
2021
11:09

மைசூரு : உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவில் பங்கேற்பதற்காக, தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யூ யானை தலைமையில் எட்டு யானைகள், நாகரஹொளே வனப்பகுதியிலிருந்து மைசூரு நகருக்கு நேற்று புறப்பட்டன. மைசூரு தசரா விழா அக்டோபர் 7ல் ஆரம்பித்து 16 வரை நடக்கிறது.

இறுதி நாளில் சாமுண்டீஸ்வரி ஜம்புசவாரி ஊர்வலம் நடக்கும். உலகப் புகழ்பெற்ற இந்த தசரா விழாவில் யானைகள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், தங்க அம்பாரி சுமக்கும் அபிமன்யூ யானை உட்பட எட்டு யானைகளுக்கு, நாகரஹொளே தேசிய பூங்காவின் வீரேனஹள்ளி கிராமத்தில் நேற்று பூஜை நடத்தப்பட்டது.மைசூரு மாவட்ட கலெக்டர் பகாதி கவுதம் மலர் துாவி, காட்டிலிருந்து நகருக்கு அனுப்பி வைத்தார்.அபிமன்யூவுடன், அஸ்வதாமா, தனஞ்செயா, விக்ரமா, காவேரி, சைத்ரா, லட்சுமி, கோபாலசுவாமி ஆகிய யானைகள், லாரிகளில் மைசூரு நகருக்கு புறப்பட்டன.மைசூரு மேயர் சுனந்தா பாலநேத்ரா, பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா, ஹுன்சூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., மஞ்சுநாத், மாவட்ட பஞ்., தலைமை செயல் அதிகாரி யோகேஷ், எஸ்.பி., சேத்தன் உட்பட வனத்துறை உயர் அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.வரும் 16ல் மைசூரு நகருக்கு யானைகள் வரவுள்ளன. அப்போதும், மலர் துாவி உற்சாகத்துடன் வரவேற்கப்படும். பின், அரண்மனை வளாகத்தில் ஜம்பு சவாரி ஊர்வலத்துக்கான ஒத்திகை நடத்தப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar