Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருமாள் கோவில்களில் அலைமோதும் ... கதிர்காமம் கோவிலில் கவர்னர் சுவாமி தரிசனம் கதிர்காமம் கோவிலில் கவர்னர் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்ணில் புதைந்த நிலையில் ராணி மங்கம்மாள் சிலை
எழுத்தின் அளவு:
மண்ணில் புதைந்த நிலையில் ராணி மங்கம்மாள் சிலை

பதிவு செய்த நாள்

22 செப்
2021
12:09

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே மண்ணில் புதைந்த நிலையில் ராணிமங்கம்மாள் சிலை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அருகில் கல்வெட்டுக்களுடன் நடுகல், குதிரையில் செல்லும் அரசரின் சிலைகள் உள்ளன.

மதுரையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் முக்கிய வணிகப்பாதைகளில் ஒன்றாக உசிலம்பட்டி, தொட்டப்பநாயக்கனூர் மலைக்கண்வாய் மலைப்பகுதி இருந்துள்ளது. வணிகப்பாதையை ஒருவழிப்பாதையாக்கி கண்காணிப்பதற்காக வடக்கு, தெற்கு மலைப்பகுதிக்குட்பட்ட சுமார் ஒன்றரை கி.மீ., நீளத்திற்கு கற்கோட்டை அமைத்து கண்காணித்துள்ளனர். நுழைவுப்பாதையை வாடிவாசல் அமைத்து அருகில் வாடிகருப்பு கோயிலும் உள்ளது.

நாயக்கர் ஆட்சியில் ராணிமங்கம்மாள் இப்பாதையை சீர்படுத்தியுள்ளார். மங்கம்மாள் சாலை என தற்போதும் பேச்சு வழக்கில் கூறி வருகின்றனர்.இப்பகுதியில் இடையபட்டி அருகே மாலைக்கோயில் உள்ளது. இதன் மேற்கே உள்ள நிலத்தில் இரண்டடி உயரம் உள்ள வேட்டைச் சமூகத்தை சார்ந்த தலைவன் தலைவியுடைய நடுகல் உள்ளது. மாலைக்கோயிலில் அரசன் குதிரையில் செல்வது போலவும், அவரது துணைவியார் அருகிலும், குடை பிடித்தபடி ஒருவரும், முன்னாலும், பின்னாலும் பாதுகாவலர்களுடன் செல்வது போன்ற நடுகல்லும் உள்ளது.

அருகில் புல்லாங்குழல் ஊதியபடி கிருஷ்ணர் சிலை உள்ளது. மாலைக்கோயிலுக்கு கிழக்கே மண்ணில் புதைந்த நிலையில் பெண் ஒருவர் கும்பிடுவது போன்ற சிலையை வெளியே எடுத்துப்பார்த்த போது, ராணி மங்கம்மாளின் தோற்றத்துடன் உள்ளது.தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கூறியதாவது: மூன்று நடுகல் சிற்பங்களும் 300 ஆண்டுகள் பழமையானவை. கல்வெட்டுடன் கூடிய நடுகல்லில் இப்பகுதியின் பூர்வகுடியாக இருந்த மூப்பர் சமூக தலைவர் சிற்பம் உள்ளது.

இடதுகையில் வில்லும், வலதுகை அம்பை எடுப்பது போலவும், அருகில் அவரது மனைவியின் சிற்பமும் உள்ளது.சிலை மீதுமான், பன்றி உருவங்கள் செதுக்கியுள்ளனர். நடுகல்லின் தென்புறத்தில் அடைக்கலங்காத தானப்பன் மகன் பெரிய அடைக்க முப்பன் மருவி என கல்வெட்டு உள்ளது. அருகில் மண்ணில் புதைந்தபடி உள்ள பெண் சிற்பம் ராணிமங்கம்மாளின் தோற்றத்தை ஒத்துள்ளது. அவரது தலையில் உள்ள கொண்டை, ஆடை, அணிகலன்கள், கும்பிட்ட வாறு உள்ள தோற்றம் ராணிமங்கம்மளுடைய சிலை என உறுதியாக கூறலாம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை கோதண்டராமர் ஸ்வாமி கோயில் ராமநவமி பிரமோற்சவ விழா கடந்த 17 ந்தேதி காலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar