பதிவு செய்த நாள்
23
அக்
2021
10:10
பழநி: பழநி மலைக்கோயிலில் இன்று முதல் (அக்.23 ) தங்கரத புறப்பாடு, தங்கத் தொட்டில் கால பூஜைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
பழநி மலைக்கோயிலில் கோரோனா பரவலை தடுக்க கடந்த 2021 ஏப்ரல் மாதம் முதல் பக்தர்கள், தங்க தொட்டில் தங்கரத புறப்பாடு கால பூஜைகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அரசு அனுமதி வழங்கவில்லை. நேற்றுமுதல் (அக்.23-) இவற்றிற்கு மலைக்கோயில் நிர்வாகம் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளித்துள்ளது. பழநி மலைக்கோயிலில் தினமும் மாலை 7:00 மணிக்கு வெளிப்பிரகாரத்தில் நடைபெறும் தங்கரத புறப்பாட்டில் பக்தர்கள் கலந்துகொள்ள ரூ.2000 செலுத்த வேண்டும். காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம் தங்கரத புறப்பாடு மூன்று பேர் கலந்து கொண்டு தேங்காய், பழம், பரிவட்டம், பஞ்சாமிர்தம், பித்தளை விளக்கு, முருகனின் ராஜஅலங்கார படம், முறுக்கு, புளியோதரை, பொங்கல், திருக்கோயில் புத்தகம், பூ மாலை ஆகியவற்றை பிரசாதமாக பெறலாம். 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ரூ. 300 செலுத்தி மலைக்கோயிலில் உள்ள தங்க தொட்டிலில் படுக்க வைத்து நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.