திருவாபரண பவனி : தற்காலிக பாலம் அமைக்கும் பணி தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2022 10:01
சபரிமலை: திருவாபரண பவனி கடந்து செல்ல வசதியாக பம்பை மற்றும் நுணங்காற்றில் தற்காலிக பாலம் அமைக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சபரிமலையில் 14-ம் தேதி மகரஜோதிகாக நாளை பந்தளத்தில் இருந்து திருவாபரணபவனி புறப்படுகிறது. பவனிவரும் அட்டத்தோடு முதல் நீலிமலை வரை ஒற்றையடிப்பாதையில் உள்காடு வழியாக இரண்டு ஆறுகளை கடந்து பயணிக்க வேண்டும். இதற்காக பம்பை ஆறு மட்டும் நுணங்காறில் குறுக்கே கடக்க வேண்டும்.பவனி கடந்து செல்ல வசதியாக பம்பை ஆற்றில் கொல்லமூழிமற்றும் எட்டப்ப்பட்டி ஆகிய இடங்களில்50 மீட்டர் நீளம் 4 மீட்டர் அகலத்தில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு அதன்மேல் பலகைகள் போடப்பட்டு இந்த தற்காலிக பாலம் அமைகிறது. இந்தப் பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் பணி முடிந்ததும் வனக்காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள நுணங்கற்றில்கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலய அருகில் தற்காலிக பாலம் அமைகிறது.
மகரவிளக்கு தினமான 14ம் தேதி மதியத்திற்கு முன்னர் இந்தப் பகுதி வழியாக திருவாபரண பவனி கடந்து செல்லும். ளாகாவில் இருந்து பவனி புறப்படும் போது பாதுகாப்புக்காக 12 வனக்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நான்கு பேர் பவனியின் முன்பாக சென்று காட்டு யானை நடமாட்டம் இருக்கிறதா என்பதை கண்காணித்து பவனியில் வரும் அதிகாரிகளுக்கு தகவலை அளிப்பார்கள்.