Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேகளீச பெருமாள் பனிப்போர்வை அணிந்து ... தைப்பூச திருவிழா: முருகன் கோவில்களில் கோலாகலம் தைப்பூச திருவிழா: முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலையில் தைப்பூச திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
மருதமலையில் தைப்பூச திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

18 ஜன
2022
04:01

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக நடந்தது. முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், கடந்த, 12ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா துவங்கியது. பத்து நாள் தைப்பூச திருவிழாவின், முதல் 6 நாட்கள், காலையும், மாலையும் யாகசாலை பூஜைகளும், சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. கொரோனா தொற்று காரணமாக, கடந்த, 14 முதல் 18ம் தேதி வரை, கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு தடை விதித்திருந்தது. இதன் காரணமாக, தைப்பூச திருவிழாவான இன்று மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தைப்பூச தேரோட்டம் இந்தாண்டும் ரத்து செய்யப்பட்டது.

தைப்பூசத்தை ஒட்டி அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 16 வகையான மங்கல திரவியங்கள் கொண்டு மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, ரத்தின அலங்காரத்தில் காட்சியளித்தார். அதைத்தொடர்ந்து, காலை, 8:00 முதல் 9:00 மணி வரை தைப்பூச திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விநாயகர் பூஜை, கங்கணம் கட்டுதல், கலச பூஜை, பட்டு வஸ்திரம் சாத்துதல், தாரை வார்த்து கொடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. காலை, 8:46 மணிக்கு, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதனை தொடர்ந்து, 9:30 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராய், யானை வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்தார். கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், தைப்பூச திருக்கல்யாண உற்சவத்தில், அர்ச்சகர்கள், திருக்கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் ... மேலும்
 
temple news
இந்தியாவில் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலை சுமுகமாக முடிவுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை ... மேலும்
 
temple news
சென்னை ; திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar