Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோனேரிராஜபுரத்தில் பரதம் ஆடி உலக ... நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய யானை வாங்குவது சாத்தியமா? மே 14 ல் ஆலோசனை நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய யானை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்ரா பவுர்ணமியில் வெள்ளியங்கிரி மலையேறி ஈசனை தரிசனம் செய்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
சித்ரா பவுர்ணமியில் வெள்ளியங்கிரி மலையேறி ஈசனை தரிசனம் செய்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

13 மே
2025
10:05

தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான ஆயிரக்கணக்கான பக்தர்கள், வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்தனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டி உள்ள மலை தொடரின் ஏழாவது மலை உச்சியில், சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க, ஆண்டுதோறும், பிப், முதல் மே மாதம் வரை மட்டுமே, பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி அளிக்கின்றனர். இந்தாண்டு, கடந்த, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். ஆண்டுதோறும், சித்ரா பவுர்ணமி தினத்தன்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறி, ஈசனை வழிபடுவது வழக்கம்.

சித்ரா பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் இரவு முதலே ஏராளமான பக்தர்கள் மலை ஏறினர். சித்ரா பவுர்ணமியையொட்டி, பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி தாயார், மற்றும் கிரி மலையிலுள்ள சுயம்பு வடிவிலான ஈசனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்து சுவாமியை தரிசித்தனர். நெரிசலை தவிர்க்க, கோவில் நிர்வாகம் வனத்துறை மற்றும் போலீசார் சார்பில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போக்குவரத்து கழகம் சார்பில், கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ஏராளமான அமைப்புகள் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சித்ரா பவுர்ணமி தினமான நேற்று இரவு வரை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரி மலை, ஈசனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்தியாவில் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலை சுமுகமாக முடிவுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, ... மேலும்
 
temple news
புதுச்சேரி; அரும்பார்த்தபுரம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் உள்ள அஷ்ட புஜ மகா காளியம்மனுக்கு, பால்குடம் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டத்திற்கு முன்பாக புதிய யானை ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழா முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் இறங்கிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar