பதிவு செய்த நாள்
21
ஜூலை
2012
10:07
காஞ்சிபுரத்தில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடி வெள்ளியையொட்டி, நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. நேற்று ஆடி மாதம் முதல் வெள்ளியையொட்டி, அனைத்து அம்மன் கோவில்களிலும், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காஞ்சிபுரம் கரிக்கினில் அமர்ந்தவள் கோவிலில், ஏராளமான பெண்கள், பொங்கலிட்டு, அம்மனை வழிபட்டனர். சந்தவெளி அம்மன் கோவில், கனகதுர்க்கை அம்மன் கோவில், திரவுபதி அம்மன் கோவில், என அனைத்து கோவில்களிலும், பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். காமாட்சியம்மன் அம்மன் கோவிலிலும், பக்தர்கள் கூட்டம் நேற்று அதிகமாக இருந்தது. ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு நேற்று புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் புற்றுக்கு பால் ஊற்றி, அம்மனை வழிபட்டனர்.