காரைக்குடியில் பக்தர்கள் மஞ்சள் அரைத்து அம்மனுக்கு நேர்த்தி கடன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2012 10:07
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தையொட்டி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையையும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். முதல் வெள்ளியான நேற்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான பெண் பக்தர்கள் நேர்த்திக்கடனாக 20க்கும் மேற்பட்ட அம்மிகளில் பச்சை மஞ்சளை அரைத்தனர்.இதில் ஏராளமானோர் ஈடுபட்டனர்.தொடர்ந்து அந்த மஞ்சளை கொண்டு, அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது.