பரமக்குடி: நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலின் வாசுகி தீர்த்தகுளம் கழிவுநீரால் மாசடைந்துள்ளது. இதனால் குளிக்க முடியாத பக்தர்கள் நீரை தலையில் தெளிப்பதால் தொற்று நோய்க்கு ஆளாகும் அவலம் நீடிக்கிறது. நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் வாசுகி தீர்த்த குளம் தூர்வாரப்படாமல், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. அருகில் உள்ள வீடு, கடைகளில் இருந்தும், பக்தர்கள் குளிக்க அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் இருந்து வெளியேறும் நீர் குளத்திலேயே விடப்படுகிறது. இதனால் பக்தர்கள் இதில் குளிக்க முடியாமல் தவிக்கின்றனர். ஐதீகம் மற்றும் நம்பிக்கையில் அடிப்படையில் வரும் பக்தர்களும் கழிவுநீரை கூட பொருட்படுத்தாமல் கை, கால் கழுவுவதும், தலையில் தெளித்துக் கொள்கின்றனர். இதனால் தொற்று நோய் அபாயத்தில் உள்ளனர். குளத்தை தூர்வாரி, கழிவுநீர் கலப்பதை தடுக்க தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.