Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துமாரியம்மன் கோவில் திருவிழா : ... காரைக்கால் அம்பகரத்தூர் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது காரைக்கால் அம்பகரத்தூர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிந்தா கோஷத்துடன் வைகை ஆற்றில் இறங்கிய வரதராஜ பெருமாள்
எழுத்தின் அளவு:
கோவிந்தா கோஷத்துடன் வைகை ஆற்றில் இறங்கிய வரதராஜ பெருமாள்

பதிவு செய்த நாள்

16 மே
2022
07:05

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில், வைகாசி வசந்த உற்சவ விழாவில், பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கினார்.

எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபைக்கு பாத்தியமாக வரதராஜ பெருமாள் கோயிலில் வசந்த உற்சவ விழா மே 15 ல் தொடங்கியது. அன்று காலை 10:00 மணிக்கு கும்ப திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு ஏற்றி கோயிலில் வழிபட்டனர். பின்னர் இரவு இன்னிசை கச்சேரி நடந்தது. இன்று அதிகாலை 4:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது கருப்பண்ண சுவாமியிடம் விடைபெற்ற பெருமாள், பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் 5:40 மணிக்கு வைகையில் இறங்கினார்.

தொடர்ந்து வைகை ஆற்றில் மண்டகப்படிகளில் சிறப்பு பூஜைகள் நடந்து, பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில், ஆற்றுப் பாலம் வழியாக, மஞ்சள் பட்டினம் மண்டகப்படி அடைந்தார். அங்கு காலை 11:00 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள், மதியம் 3:00 மணிக்கு அனுமார் கோயிலில் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதனையடுத்து பெரிய பஜார் வழியாக வைகை ஆற்றில் மாலை 6:00 மணிக்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து எமனேஸ்வரம் பகுதியில் அனைத்து நெசவாளர் குடியிருப்புகளுக்கும் சென்ற பெருமாள், நள்ளிரவு வண்டியூர் மண்டகப்படியில் சேர்க்கையாகினார். நாளை இரவு சேஷ வாகனத்தில் எழுந்தருளும் பெருமாள், மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்து அவதார சேவைகளில் அருள்பாலிக்க உள்ளார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பவுர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தியாகும். முழு முதற்கடவுளாகிய விநாயகப் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 
temple news
செஞ்சி; பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.செஞ்சி ... மேலும்
 
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar