சபரிமலையில் 18 படிகளுக்கு மேல் தானியங்கி மேற்கூரை : சிறப்பு பூஜையுடன் பணி தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மே 2022 05:05
சபரிமலை : 18 படிகளுக்கு மேல் 70 லட்சம் ரூபாய் செலவில் தானியங்கி மேற்கூரை அமைக்கும் பணி இன்று சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.
சபரிமலையில் நடைபெறும் படிபூஜை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 18 படிகளிலும் பட்டு விரித்து குத்துவிளக்கு, தேங்காய் வைத்து அதில் மாலை அணிவித்து தந்திரி சுமார் ஒரு மணி நேரம் பூஜை நடத்துவார். மண்டல மகரவிளக்கு காலத்தை தவிர்த்து நடை திறந்திருக்கும் எல்லா நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும். மழை நேரத்தில் பூஜை நடத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டதால் படிக்கு மேல் உயரமாக கண்ணாடி கூரை சில ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டது. ஆனால் தேவபிரசன்னத்தில் இந்த கூரையை அகற்ற வேண்டும் என்று சொன்னதால் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் தற்போது தானியங்கி கூரை அமைக்க ஐதாராபாத்தை சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனம் முன்வந்துள்ளது. 70 லட்சம் ரூபாய் செலவில் ஹைட்ராலிக் முறையில் இயங்கும் இந்த கூரையை சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் பணி தொடங்கியது. மூன்று மாதத்தில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.