Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்திரகாளியம்மன் கோயிலில் ... சபரிமலையில் 18 படிகளுக்கு மேல் தானியங்கி மேற்கூரை : சிறப்பு பூஜையுடன் பணி தொடக்கம் சபரிமலையில் 18 படிகளுக்கு மேல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னையில் ரூ.25 கோடி மதிப்பிலான பச்சைக்கல் லிங்கம் மீட்பு: இருவர் கைது
எழுத்தின் அளவு:
சென்னையில் ரூ.25 கோடி மதிப்பிலான பச்சைக்கல் லிங்கம் மீட்பு: இருவர் கைது

பதிவு செய்த நாள்

17 மே
2022
05:05

சென்னை: சென்னையில் ரூ.25 கோடி மதிப்பிலான தொன்மையான பச்சைக்கல் லிங்கத்தை விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பச்சைக்கல் லிங்கம் மீட்கப்பட்டது.

சென்னை பூந்தமல்லி அருகே தொன்மையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைக்கல் லிங்கமொன்று பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், கடத்தப்பட உள்ளதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்ய சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் இயக்குனர் ஜெயந்த் முரளி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, பச்சைக்கல் லிங்கம் வைத்திருப்பவர்களிடம் சிலைகளை வாங்கும் வியாபாரிகள் போல் நடித்து பேசியுள்ளனர். அப்போது அச்சிலை ரூ.25 கோடி என அதிகாரிகள் எனத் தெரியாமல் விலையை கூறியுள்ளனர். பின்னர் சிலையை காண்பித்ததும் அவர்களை கையும் களவுமாக அதிகாரிகள் பிடித்தனர். இதனையடுத்து சிலையை விற்க முயன்றதாக சென்னை வெள்ளவேடு புதுகாலனியை சேர்ந்த பக்தவச்சலம் (எ) பாலா (வயது 46) மற்றும் சென்னை புதுசத்திரம் கூடப்பாக்கம் கலெக்டர் நகரை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 42) ஆகியோரை கைது செய்து போலீஸ் எஸ்.ஐ., ராஜசேகர், அவர்களிடம் இருந்து சிலையை கைப்பற்றினார்.

பின்னர், அந்நபர்களை சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தார். கைப்பற்றப்பட்ட அந்த பச்சைக்கல் லிங்கத்தில், உலோகத்தால் ஆகிய நாகாபரணம் உள்ளது. அதை தாங்கி அதன் பின்புறம் பறக்கும் நிலையில் கருடாழ்வர் சுமார் 29 செ.மீ உயரமும் 18 செ.மீ அகலமும் கொண்டுள்ளது. அதன் எடை சுமார் 9 கிலோ 800 கிராம் எடையும் உள்ளது. இந்தச் சிலையானது 500 ஆண்டுகள் தொன்மையானது எனவும் கூறப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் உள்ள நாதநீராஜனம் தலத்தில் உலக நன்மைக்காக  பெருமாளை வேண்டி இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar