பதிவு செய்த நாள்
29
மே
2022
01:05
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், அக்னி தோஷ நிவர்த்தி பூஜை நடந்தது. அக்னி நட்சத்திரம் கடந்த, 4ல் தொடங்கி நேற்று வரை இருந்தது. வெப்பம் கடுமையாக இருக்கும், இக்காலத்தில் இறைவனை குளிர்விக்கவும், ஜீவராசிகளை பாதுகாக்க வேண்டியும், போதிய மழை பெய்ய வேண்டியும், சிவன் கோவில்களில் தாராபிஷேகம் நடக்கும். இதில் பன்னீர், பச்சை கற்பூரம், வெட்டிவேர், ஏலக்காய், ஜாதிக்காய், ஜவ்வாது, சந்தனம் போன்றவற்றை தாரா பாத்திரத்தில் ஊற்றி, மூலவர் லிங்கம் மீது சொட்டு சொட்டாக விழும்படி, அபிஷேகம் நடந்து வந்தது. நேற்றுடன் அக்னி நட்சத்திரம் நிறைவுற்றது. இதையடுத்து, 26ம் தேதி மாலை அக்னி தோஷ நிவர்த்தி, 1,008 கலசாபிஷேக முதல் கால பூஜை தொடங்கியது. இரண்டு, மூன்று மற்றும் நான்காம் கால பூஜைகள் நடத்தப்பட்டு, 1,008 கலச புனித நீரை கொண்டு, அக்னி தோஷ நிவர்த்தி கலசாபிஷேகம், அருணாசலேஸ்வரருக்கு நேற்று காலை நடந்தது.