Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூஜையறையில் ‘ஏ.சி.’ வைக்கலாமா? முன்வினை பாவம் தீர... எளிய வழிபாடு! முன்வினை பாவம் தீர... எளிய வழிபாடு!
முதல் பக்கம் » துளிகள்
கந்தனிடம் செல்லுங்கள்! சொந்தவீடு கேளுங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2022
06:09


நம்மில் பலரும் வாழ்நாள் லட்சியமாக வைத்திருப்பது சொந்த வீடு. கனவெல்லாம் வீடு. வீடெல்லாம் கனவு என்ற இலக்கை நோக்கி ஓடுவதுதான் நடைமுறை. பங்களாக்களை பார்க்கும்போதெல்லாம், ‘இதுமாதிரி நாமும் எப்போது கட்டப்போகிறோம்’ என்று மனக்கோட்டை கட்டுபவரா நீங்கள்.. உங்களுக்காகவே நாமக்கல் மாவட்டம் ரெட்டிப்பட்டியில் காத்திருக்கிறார் கந்தகிரி முருகன்.
வானத்துக்கும், பூமிக்குமான விஸ்தீர்ணமான மலை. அடர்த்தியான மரங்கள். பசுமைச்செடி, பூக்கள். இவைகளுக்கு ஊடே பறந்து விளையாடும் வண்ணத்துப்பூச்சி. ஒவ்வொரு இலையிலும் பனித்துளி. பாறைகளுக்கு இடையே செழிப்பான கொடிகள் என நமது கண்களை நிறைக்கும் இடம்தான் கந்தகிரி.   
கள்ளம் கபடம் இல்லாத குழந்தையானவர் முருகன். அவ்வையிடம் சுட்டப்பழம் வேண்டுமா... சுடாத பழம் வேண்டுமா என்று புன்னகை பூத்த மன்னன். அவனிடம் குழந்தை தன்மையும் உண்டு. ஞானமும் உண்டு. சூரசம்ஹாரம் செய்யும் வீரனாகவும் இருப்பான். தன்னை நாடி வருவோருக்கு அன்பும் காட்டுவான். இந்த காட்சிகளை எல்லாம் நாம் கோயிலுக்கு செல்லும் முன்பே பார்த்துவிடலாம். ஆமாம்.. அவ்வளவு சிலைகளும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன.  
இப்படி பல காட்சிகளை பார்த்தவாறே, 195 படிகளை கடந்தவுடன் கோயில் தெரியும். உள்ளே நுழைவதற்கு முன் சின்னஞ்சிறிய விநாயகர், இடும்பன் நம்மை வரவேற்பர். அதற்கு பிறகு சின்ன சின்னதாய் இருக்கும் விளக்குகளின் வெளிச்சத்தில் அழகன் முருகனின் புன்சிரிப்பை காணலாம். அவரை பார்த்தவுடனேயே வேண்டுதல் மறந்து, முருகனின் அழகு நம் மனதில் வியாபித்து நிற்கும். பிரகாரத்தின் துாய்மை, அங்கு வரும் பக்தர்களின் மனத்துாய்மை என துாய்மையின் பிறப்பிடமாக உள்ளது கோயில். கார்த்திகை, சஷ்டியில் முருகனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்படும். முன்பு கரடு என்று அழைக்கப்பட்ட இக்கோயில், வாரியாரால் கும்பாபிேஷகம் செய்யப்பட்டு ‘ஸ்ரீகந்தகிரி’ எனப்பெயர் சூட்டப்பட்டது.
சரி. வாருங்கள். சொந்த வீடு கனவு நனவாக என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம். தொடர்ந்து மூன்று கார்த்திகை இங்கு வாருங்கள். அவரே புதிய வீடு கட்டுவதற்கான வழியை ஏற்படுத்தி தருவார். அறுபடை வீட்டுக்கும் சொந்தக்காரரான அவர், உங்களையும் ஒரு வீட்டுக்கு சொந்தக்காரனாக மாற்ற மாட்டாரா...   

எப்படி செல்வது: நாமக்கல் பஸ்ஸ்டாண்டில் இருந்து 5 கி.மீ.,
விசேஷ நாள்: பவுர்ணமி, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம்
நேரம்: காலை 8:30 – 12:00 மணி, மாலை 4:30 – 7:30 மணி

 
மேலும் துளிகள் »
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar