பதிவு செய்த நாள்
22
செப்
2022
08:09
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தமிழக அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஹிந்து மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாமல் புறக்கணித்து, பிற மத பண்டிகைக்கு வாழ்த்து கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதற்கு ஒருபடி மேலே தி.மு.க., எம்.பி., க்கள், கட்சி முக்கிய நிர்வாகிகள் சிலர் ஹிந்து பெண்கள், மதம் மற்றும் சடங்குகளை கொச்சைப்படுத்தியும், தரம் தாழ்ந்தும் பேசுகின்றனர். சமீபத்தில் தி.மு.க., எம்.பி., ஆ.ராசா, ஹிந்துக்களை தகாத வார்த்தைகளால் பேசியது மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி, ராசாவுக்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் முதல்வர் மனைவி துர்கா, மருமகன் சபரீசன், அமைச்சர்கள் சிலர் கோயில் கோயிலாக சென்று சுவாமி தரிசனம் செய்து தி.மு.க., வினர் இரட்டை வேடம் போடுகின்றனர். இதனால் தி.மு.க., மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை புனித நீராடி விட்டு சுவாமி, அம்மன் சன்னதியில் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.