நல்லாண் பிள்ளை பெற்றாள் ஐயப்பன் கோவிலில் வருஷாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2022 08:12
செஞ்சி: நல்லாண் பிள்ளை பெற்றாள் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.
செஞ்சியை அடுத்த நல்லாண் பிள்ளை பெற்றாள் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷக விழா நடந்தது. இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு மீனாட்சி உடனுறை சொக்கநாதர் கோவிலில் இருந்து ஐயப்பன் திருவாபரணப் பெட்டியை ஊர்வலமாக எடுத்து வந்தனர். காலை 10.30 மணிக்கு ஐயப்பன், விநாயகர், முருகன், வராஹி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், தர்மசாஸ்தா ஐயப்பனுக்கும் தும்பூர் சிவ ஆறுமுகம் சிவனடியார் தலைமையில் மகா யாகம் நடந்தது. செத்தவரை மோனசித்தர் பூர்ணாஹூதியுடன் மகா யாகத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து 108 சங்கபிஷேகமும், மகா தீபாரதனையும் நடந்தது. பகல் 12.30 மணிக்கு ஐயப்பன் பிரகார உலாவும், 1.00 மணிக்கு அன்னதானமும் வழங்கினர். மாலை 6 மணிக்கு தர்மசாஸ்தா ஐயப்பன் திருவீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.