காளஹஸ்தி கோயிலில் ராகு கேது சர்ப தோஷ பூஜை: வெளிநாட்டினர் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2022 10:12
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நடக்கும் ராகு கேது சர்ப தோஷ பூஜையில் ஈடுபட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டினரும் ராகு கேது பூஜையில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் இன்று புதன்கிழமை ரஷ்யாவை சேர்ந்த 15 பேருக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு வந்த தோடு ராகு கேது பூஜையில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஸ்ரீ ஞான பிரசூனாம்பிகா சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்தனர் .இவர்களுக்கு கோயில் சார்பில் தீர்த்த பிரசாதங்களை வழங்கியதோடு கோயிலின் சிறப்பையும் விளக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் ரஷ்யா நாட்டினர் பேசுகையில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது என்றும் கோயிலுக்குள் இருக்கும் சிற்ப கலைகள் மிகவும் அழகாக இருப்பதாகவும் கோயிலுக்கு வந்தது மிகவும் சந்தோஷத்தையும் அமைதியையும் கொடுத்ததாகவும் ராகு கேது பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது என்றும் விவரித்தனர்.