மாசி மகத்தன்று முருகப்பெருமானை வழிபடுவதால் ஆண் குழந்தை பிறக்கும், அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும். மாசி மாத பூச நட்சத்திரம் மிகவும் விசேஷமானது. அன்றுதான் முருகப் பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தருளினார். மாசி மாதம், பௌர்ணமியும் மகம் திதியும் சேர்ந்து வாரக்கூடிய நாளில் மாசிமகம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட வேண்டும், அவ்வாறு வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும் ஆண் குழந்தை பிறக்கும். இன்று முருகன் கோயில்களில் விளக்கேற்றி வழிபட நம் பாவங்கள் தொலைந்து புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.