ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழா : ஆதிபராசக்தி அலங்காரத்தில் அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2023 01:03
ஊட்டி: ஊட்டி மாரியம்மன் கோவில் நிகழ்ச்சி நடந்தது. ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா ஆண்டுதோறும், ஏப்., மாதம் நடைபெறுகிறது. நடப்பாண்டு தேர்திருவிழாவையொட்டி, கடந்த, 17ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான, தேர் திருவிழா ஏப்., 18ம் தேதி நடக்கிறது. நேற்று, உபயதாரர்களின் முதல் நிகழ்ச்சியான நீலகிரி மாவட்ட ஒக்கலியர் சார்பில் ஆகி பராசக்தி அலங்காரம் நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.