சங்கரன்கோவில் கர்ப்ப கிரகத்தில் மூலவர் மீது சூரிய ஒளி: ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் அதிசயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2023 09:03
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிவிழும் அரிய நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் 11ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலாகும். கோயிலில் ஆண்டுதோறும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 21, 22, 23 ஆகிய தேதிகளில் கர்ப்ப கிரகத்தில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்ச்சி நடப்பது வழக்கம். சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்ச்சியை சூரிய பகவான் சிவலிங்கத்தை நேரடியாக பூஜிப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. இதனால் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் மூன்று நாட்களும் குறிப்பிட்ட நேரத்தில் கோயிலின் மின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு சிவலிங்கத்திற்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சூரிய பகவானுக்கும் சிறப்பு தீபாராதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று மார்ச் 22ம் தேதியை முன்னிட்டு சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்ச்சி நடந்தது. இந்த அரிய ட்சியை ஏராளமான பக்தர்கள் பார்த்து தரிசனம் செய்தனர். அப்போது சிவலிங்கத்திற்கும் , சூரிய பகவானுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. கடந்த ஆயிரம் ஆண்டுகளாக குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்ச்சி பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.