Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி தெப்பக்குளத்தில் ... நெல்லையப்பர் கோயிலில் 21ம் தேதி நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்! நெல்லையப்பர் கோயிலில் 21ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி படிக்கட்டில் குவியும் சூட மெழுகு: பக்தர்கள் பாதிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 ஜன
2013
10:01

பழநி: பழநி மலைக்கோவில் யானைப் பாதை, படிக்கட்டு பாதைகளில், சூடம் ஏற்றுவதால், ஏராளமான மெழுகு படிந்துள்ளது. இதனால், பாதயாத்திரை பக்தர்கள், மிகவும் சிரமப்படுகின்றனர். தமிழகத்தில், அதிக வருமானத்தை ஈட்டித் தரும் பழநி கோவிலில் யானைப் பாதை, படிப் பாதை என, பக்தர்கள் மலையேற, இரு வழிகள் உள்ளன. இவ்விரு வழிகளில் உள்ள மண்டபம், படிக்கட்டுகளில், பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர். பாத விநாயகர் கோவிலில் ஆரம்பிக்கும், சூடம் ஏற்றும் வழிபாடு, மலைக்கோவில் கடைசி படிக்கட்டு, இரட்டை விநாயகர் கோவில், வெளிப் பிரகாரம் வரை தொடர்கிறது. இதன் காரணமாக, கற்பூரத்தின் மெழுகு படிகளில் அதிகளவில் படிந்துள்ளது. பழநி கோவிலுக்கு நாள்தோறும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன், தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. படிக்கட்டுகளில் கற்பூரம் முழுமையாக எரியாததால், அவ்விடங்களில் சூட மெழுகு படிந்துள்ளது. இதனால், பக்தி பரவசத்துடன் செல்லும் பக்தர்கள் சிலர், ஏறும் போதும், இறங்கும் போதும் வழுக்கி விழுகின்றனர். படிக்கட்டுகளில் சூடம் ஏற்றுவதை தவிர்க்க வலியுறுத்தி, ஒரு சில இடங்களில் மட்டுமே, அறிவிப்பு பலகை உள்ளது. எனவே, பாதுகாப்பு ஊழியர்கள் மூலம், கற்பூரம் ஏற்றும் பக்தர்களை எச்சரிக்கை செய்யலாம். ஜன., 21ல், தைப்பூச திருவிழா துவங்க உள்ளதால், பழநிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை, மேலும் அதிகரிக்கும். ஆகையால், தேவஸ்தானம் படிக்கட்டுகளில் குவிந்துள்ள கற்பூர மெழுகுகளை அப்புறப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொங்கல் வசூல் ரூ.4 கோடியை தாண்டியது: பொங்கலையொட்டி பழநி கோயில் வசூல் 4 கோடி ரூபாயை தாண்டியது. தைப்பூசத்திற்கு முன்னரே பழநியில் பாதயாத்திரை பக்தர்கள் திரண்டுள்ளனர். பழநி-திண்டுக்கல், பழைய தாராபுரம் ரோடு, புதுதாராபுரம் ரோடு, உடுமலை ரோட்டில் பல கி.மீ., தூரத்திற்கு பாத யாத்திரை பக்தர்களை தான் காண முடிகிறது. பொங்கலை முன்னிட்டு 5 நாட்களில் தரிசன, அபிஷேக, அர்ச்சனை டிக்கெட்டுகள், பஞ்சாமிர்த விற்பனை, தங்கரத புறப்பாடு காணிக்கை, வின்ச் மூலம் வசூல் 2 கோடி ரூபாயை எட்டியது.

உண்டியல் திறப்பு: மலைகோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து உண்டியல்கள் எண்ணப்பட்டது. ரொக்கம் 2 கோடி ரூபாயை தாண்டியது. இது தவிர தங்கம், வெள்ளியால் ஆன பொருட்களும், வெளிநாட்டு கரனசிகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. உண்டியல் திறப்பின் போது, பழநி கோயில் இணை ஆணையர் பாஸ்கரன், துணை ஆணையர் ராஜமாணிக்கம், உதவி ஆணையர் (அறநிலையத்துறை) ரமேஷ், முதுநிலை கணக்கியல் அதிகாரி ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar