Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மெரினாவில் காந்தி வேடத்தில் ... திருச்செந்தூரில் ரூ.3 கோடி வசூல்! திருச்செந்தூரில் ரூ.3 கோடி வசூல்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தியாகராஜர் ஆராதனை விழாவில் பிரபல பாடகர்கள் இசை விருந்து!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 ஜன
2013
10:01

தஞ்சாவூர்: திருவையாறு, தியாகராஜர், 166வது ஆராதனை விழாவில், பிரபல இசைக்கலைஞர், பாடகர்கள் ஒரே மேடையில் பங்கேற்று, பாடல், தவில், நாதஸ்வரம், வயலின் என, பலவித இசையை, ரசிகர்களுக்கு விருந்தாக்கினர். தஞ்சை மாவட்டம், திருவையாறு காவிரி ஆற்றங்கரையில் தியாகராஜர் ஸ்வாமியின், 166வது ஆராதனை விழா கடந்த, 27ம் தேதி துவங்கியது. இதில், சாதாரண குழுவுக்கும், கலைஞர்களுக்கும், 10 நிமிடமும், பிரபல பாடகர்களுக்கு, 20 நிமிடமும் நேரம் ஒதுக்கியிருந்தனர். இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் திருவையாறு திருத்தலம் குறித்து, தியாகராஜர் இயற்றிய கீர்த்தனைகளை வானதி சிவக்குமார் பாடியது, பார்வையார்களை கவர்ந்தது. தொடர்ந்து, திருக்கருகாவூர் சகோதாரர்கள் ரமணன், சரவணன் நாதஸ்வரம் மற்றும் கோட்டூர் வீராச்சாமி, தாராசுரம் சாமிநாதன் நாதஸ்வரம் நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் இதயங்களை பறிகொடுத்தனர். இதனைத்தொடர்ந்து, அடுத்தடுத்த தினங்களில் பிரபல பாடகர்கள் உன்னிகிருஷ்ணன், காயத்ரி, அமரர் டி.கே.ஜெயராமனின் சீடர் சங்கீத விஜயசிவா உள்பட பிரபலங்கள், இசைக்கலைஞர்கள் மீட்டிய இசை ராகங்கள், விழா அரங்கில் அமர்ந்திருந்த ரசிகர்கள் உள்ளங்களுக்கு இசை விருந்து அளித்தன. நேற்று, நான்காவது நாளாக இசை ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. காலை, 9 மணிக்கு கிருஷ்ணகிரி பாரத், அசோக் நாதஸ்வரம் வாசித்தும், சுப்பிரமணியன், செந்தில் தவில் வாசித்தும் நிகழ்வை துவக்கினர். தொடர்ந்து, 10, 15, 20 நிமிடங்கள் என அடுத்தடுத்து குழுவினர் மேடையேறி, இடைவெளியின்றி இசை நிகழ்ச்சிகளை இரவு வரை நடத்தினர். இதில், வடுவூர் சகோதரிகள் பத்மஜா, காயத்ரி, திருச்சி அமிர்தவர்ஷினி குழுவினர் பாட்டு, வில்லிவாக்கம் பாலமுருகன் வயலின், அண்ணாமலை பல்கலை மாணவர்கள் சுரேஷ், உதயசங்கர் நாதஸ்வரம் உள்பட பலர் பங்கேற்றனர். நேற்று காலை பிரபல பாடகர் ஜேசுதாஸ் பாட்டுப்பாடி, தியாராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, தியாகராஜர் ஸ்வாமிகள் முக்தி அடைந்த தினமான இன்று ஐந்தாவது நாள் நிகழ்ச்சியில் பஞ்சரத்ன கீர்த்தனை நடக்கிறது. இதில், கலைஞர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்று, பிரமாண்டமான இசை விருந்து படைக்கவுள்ளனர். இதற்கான ஏற்பாட்டை ஸ்ரீ தியாக பிரம்ம மஹோத்ஸவ சபா நிர்வாகிகள் செய்துள்ளனர். * தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி, தஞ்சை மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar