Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்து-முஸ்லிம் மக்கள் இணைந்து ... கந்­த­கோட்­டத்தில் ஆடி கிருத்­திகை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எந்த கோவிலுக்கு எவ்வளவு செலவு: பதில் தர மறுக்கும் அறநிலைய துறை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2013
10:07

இந்து சமய அறநிலையத்துறை, பொதுநிதி திட்டத்தின் கீழ், எந்த கோவிலுக்கு எவ்வளவு செலவழித்தது என்பது குறித்த தகவல்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்காததுடன், தகவல் கேட்டவரையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், பதில் அளித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட, கோவில்கள், அறநிலையங்கள் போன்றவற்றிற்கு ஆண்டுதோறும் அனுமதிக்கப்படும், வரவு - செலவு திட்டத்தில், "பொதுநல நிதி என்ற தலைப்பில், நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தில், ஒரு கால பூஜை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. இத்திட்டத்தின் கீழ், எத்தனை கோவில்களுக்கு, எவ்வளவு செலவழிக்கப்பட்டது போன்ற தகவல்களை அறிந்து, அதன் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய, ஆலய வழிபடுவோர் சங்கம் முடிவு செய்தது. அதற்கு, ஏதுவாக, 2005 முதல், 2012 வரை, பொது நல நிதி மூல செலவழிக்கப்பட்ட தொகை, ஒவ்வொரு இனம் குறித்தும் - கோவில்கள் - அறநிலையங்கள் என, சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர், பாரதி மனோகர் விவரம் கேட்டார். ஆனால், அவர் கேட்ட விவரங்களை தராத இந்து சமய அறநிலையத்துறை, தகவல் கேட்டவரையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக பதில் அளித்துள்ளது.

அறநிலையத்துறை அனுப்பிய பதில்: மனுதாரர் குறிப்பிட்ட ஒரு கோவில் அல்லது அறநிறுவனம் குறித்து, விவரம் கேட்கவில்லை. ஒட்டுமொத்தமாக, எட்டு ஆண்டுகளில், பொதுநலநிதி வழங்கப்பட்ட, அனைத்து கோவில்களின் பெயர் விவரம் கேட்கப்பட்டுள்ளதால், இதை வழங்க இயலவில்லை. இக்கேள்வி, பணிச்சுமையை உருவாக்கும் உள்நோக்கத்துடன் அமைந்துள்ளது. மேலும், மனித ஆற்றலை பாழாக்கும் வகையில் உள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் உன்னத நோக்கத்தை திசை திருப்பும் விதத்தில் உள்ளதாக அமைந்துள்ளது. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாகர்கோவில்; கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் இன்று 1175 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை ... மேலும்
 
temple news
சபரிமலை; பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷுவுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறந்தது. வரும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், செவ்வாய்க்கிழமையான இன்று ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வழிபட பக்தர்களை தினமும் அனுமதிக்க வேண்டும் ... மேலும்
 
temple news
திருவாலங்காடு; திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் திருக்கோவில் திருவாலங்காடில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar