தேவகோட்டை : தேவகோட்டை கோயில்களில் ஆடிப்பூரத்திருவிழா கொண்டாடப்பட்டது. காமாட்சியம்மன் கோயிலில் கடந்த 23 ந் தேதி காப்புக்கட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன.பக்தர்கள் சார்பில் திருவிளக்கு பூஜை, பூச்சொரிதல், பால்குடம் எடுத்து பாலாபிஷேகம் நடந்தது. அபிராமி அம்மன் கோயிலிலும் 23 ந்தேதி காப்புக்கட்டி தினமும் மாலை சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் நடந்தது. திருவிளக்குப் பூஜை, பால்குடம், பூச்சொரிதல் நிகழ்ச்சிகள் நடந்தன. பூரத்தன்று அபிராமி அம்மனுக்கு அபிராமி அந்தாதி பாடி பக்தர்கள் வழிபட்டனர்.