புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, ருத்ராட்சம் இலவசமாக வழங்கப்பட்டது. புதுச்சேரி மார்க்கண் டேயபுரம் அறக்கட்டளை சார்பாக, ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு ருத்ராட்சம் வழ ங்கப்பட்டு வருகிறது. இதே போல், 5ம் ஆண்டாக, அறக்கட்டளை சார்பாக நேற்று பிற்பகல், காந்தி வீதியிலுள்ள வேதபுரீஸ்வரர் கோவில் அருகே ருத்ராட்சம் வழங்கும் விழா நடந்தது. விநாயகர் சிலைகளை விஜர்சனம் செய்வதற்காக ஊர்வலமாக வந்த பக்தர்கள் 1008 பேருக்கு, ருத்ராட்சம் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சிவனடியார் சந்திரசேகரன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் செல்வராஜ்,ஆறுமுகம், அலமேலு, பழனி, நீலமேகம், சிவகாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.