பதிவு செய்த நாள்
24
அக்
2014
01:10
காங்கேயம் :காங்கேயம் அடுத்த சிவன்மலை முருகன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் கூட்டம் நிரம்பி இருந்தது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இரண்டு நாட்கள் விடுமுறை விடுக்கப்பட்டதாலும், நேற்று அமாவாசை தினமாக இருந்ததாலும், பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலில் குவிந்தனர்.ஆகையால், கார், பைக்களிலும், பஸ் மூலமும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வந்தனர்.இதை எதிர்பார்க்காத கோவில் நிர்வாகம், சிறப்பு பஸ் வசதி, போதிய அளவில் ஏற்படுத்தி தரவில்லை.அதனால், பஸ்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல், அதிக பக்தர்களை ஏற்றி, மலைப்பாதையில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.இதுபோன்ற, விசேஷ நாட்களில், கூடுதலாக அரசு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.