பொய் சொன்ன வாய்க்கு போஜனம்
கிடைக்காது என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது பொய் சொன்னால் சாப்பாடு
கிடைக்காது அல்லது கிடைத்தும் உண்ண முடியாது. சத்தியத்தை மீறுவதும் ஒரு
வகை பொய் தான். இதற்குப் பரிகாரம் எல்லாம் கிடையாது. பிறருக்கு நன்மை
விளைவிக்கும் சூழலில் அதாவது பிறரைக் காப்பாற்ற வேண்டிய கட்டாய
சூழ்நிலையில் சத்தியத்தை மீறுவது, பொய்யுரைப்பது போன்றவை ஏற்புடையது
என்கிறார் திருவள்ளுவர். ‘பொய்மையும் வாய்மையிடத்து’ என்பது அவரது
பொய்யாமொழி.