பதிவு செய்த நாள்
19
டிச
2014
12:12
ஊட்டி : ஊட்டி அருகே, தோடர் இன மக்களின் கோவிலில் கூரை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரியில் வாழும் பழங்குடியின மக்கள் தங்களின் பாரம்பரியம், கலாசாரம் மாறாமல் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இயற்கையை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி, ஊட்டி கிளன்மார்கன் அருகேயுள்ள தார்நாடு மந்துவில் வசிக்கும் மக்கள், தங்கள் வழிபாடுக்கொன மூன்று கோவில்களை அமைத்துள்ளனர். அதில், கோவில்களின் கூரையை "அவ்வுல் என்ற கோரை புற்களில் வேய்வதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர்.அதன்படி, அங்குள்ள "தார்வோள்ளி என்ற கோவிலில், 11 ஆண்டுக்கு பின், கூரையை புதுப்பிக்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. "அவ்வுல் என்ற கோரை புற்களை வைத்து, மூங்கில், பிரம்பு உதவியுடன் , கூரையை புதுப்பித்து கட்டினார்கள். பின், பாரம்பரிய நடனமாடினர். அனைவருக்கும் பால் சாதம் வழங்கப்பட்டது. ஏராளமான தோடரின மக்கள் பங்கேற்றனர்.