பஞ்சாமிர்தம் தயாரிக்க.. பழநியில் குவிந்துள்ள மலை வாழைப்பழம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2015 04:01
பழநி: பாதயாத்திரைக்கு புகழ்பெற்ற தைசப்பூச விழாற்கு’ வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் தயார் செய்வதற்காக மலை வாழைப் பழங்கள் டன்’ கணக்கில் வந்துள்ளன. இவ்வாண்டு பழம் வரத்து இல்லாமல் விலை அதிகரித்துள்ளது. பழநி தைப்பூசவிழாவிற்கு வெளி மாநிலங்கள், மாவட்டங் களிலிருந்து பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் பஞ்சாமிர்தம் தயாரிக்க மலை வாழைப்பழம், கற்பூரவள்ளி வாழை பழங்களை அதிகளவில் வாங்குகின்றனர். இந்தாண்டு கர்நாடக மாநிலம் குடகு மலைப்பழம், பாச்சலூர், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இருந்து மலை பழங்கள் டன்’ கணக்கில் வந்துள்ளன. மலைபழங்கள் வரத்துகுறைவு காரணமாக ஒரு பழம் ரூ.6முதல் ரூ.10 வரை தரத்திற்கு ஏற்றவாறு விற்கப் படுகிறது. கடந்த ஆண்டு தைப்பூச விழா 100 டன் வரை பழங்களை விற்பனையானது. அதை விட கூடுதலாக இவ்வாண்டு 120 டன் வரை விற்பனை ஆகும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து பழ வியாபாரி பொன்னுச்சாமி கூறுகையில், பழநி வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் தய õரிக்க மலை வாழைப்பழத்தை தான் விரும்பி வாங்குகின்றனர். வரத்துகுறைவு காரணமாக கடந்தாண்டு ரூ.6க்கு விற்ற பழம் ரூ.7ஆகவும் தரத்திற்கு தகுந்தற் போல் ரூ.10வரை விற்கிறோம். கடந்தாண்டு வாழைப்பழத்திற்கு தட்டுபாடு ஏற்பட்டது. இவ்வாண்டு அவ்வாறு இல்லாமல் பழம் கிடைக்கிறது. அதேசமயம் விலையும் அதிகரித்துள்ளது,’ என்றார்.