பதிவு செய்த நாள்
10
மார்
2015
02:03
தன்னம்பிக்கை படைத்த சிம்ம ராசி அன்பர்களே!
கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் மார்ச் 21க்கு பிறகு நன்மை அதிகரிக்கும். சுக்கிரன் ஏப்.7 வரை நற்பலன் கொடுப்பார். பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும். புதன், மார்ச் 21 முதல் ஏப். 6 வரை நன்மை அளிப்பார். மாத தொடக்கத்தில் குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவி வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். மார்ச் 21க்கு பிறகு நிலைமை சீராகும். பிள்ளைகளின் செயல்பாடு மகிழ்ச்சி தரும். மார்ச் 27,28 தேதிகளில் உறவினர்கள் வருகையால் நன்மை ஏற்படும். ஆன்மிகச் சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். உடல் நிலை திருப்தியளிக்கும். தொழில், வியாபாரத்தில் உழைப்பின் பேரில் வருமானம் கிடைக்கும். மார்ச் 16,17, ஏப். 12,13 தேதிக்கு பிறகு திடீர் வருவாய் கிடைக்க வாய்ப்புண்டு. பகைவர்களை வெற்றிக் கொள்ளும் ஆற்றல் உண்டாகும். அரசு வகையில் பிரச்னை ஏற்படலாம். வரவு, செலவு கணக்கில் கவனம் செலுத்துவது நல்லது.
பணியாளர்கள் பணிச்சுமையைத் திறம்பட சமாளிப்பர். சிரத்தை எடுத்தால் தான் கோரிக்கை நிறைவேறும். அரசு ஊழியர்கள் மார்ச் 25,26 தேதிகளில் சிறப்பான பலன் காணலாம். மாத இறுதியில் சக ஊழியர்களின் பொல்லாப்பை சந்திக்கலாம். விட்டுக் கொடுத்து போகவும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஏப்ரல் 7க்கு பிறகு போட்டி அதிகம் இருக்கும். ஒப்பந்தம் கிடைப்பதில் தாமதம் ஆகலாம்.
அரசியல்வாதிகள் சுமாரான பலனையே காண முடியும்.
மாணவர்கள் மாதத் தொடக்கத்தில் அக்கறையுடன் படிப்பது அவசியம். மார்ச் 21க்கு பிறகு, புதன் சாதகமாக இருப்பதால் கல்வி வளர்ச்சிஉண்டாகும்.
விவசாயிகளுக்கு காய்கறி, கீரை வகைகளில் சிறப்பான மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு விவகாரங்களில் மெத்தனம் காட்டுவது கூடாது.
பெண்கள் அக்கம் பக்கத்தினரின் அன்பை பெறுவர். மார்ச் 18,19, ஏப். 6,7 தேதிகள் மகிழ்ச்சியாக அமையும்.
நல்ல நாள்: மார்ச் 16, 17, 18, 19, 25, 26, 27, 28, ஏப். 1, 2, 6, 7, 12, 13
கவன நாள்: மார்ச் 20, 21 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 5, 7 நிறம்: பச்சை, வெண்மை
வழிபாடு: காலையில் சூரியனை வழிபடுங்கள். ராகு பகவானுக்கு உளுந்து படைத்து அர்ச்சனை செய்யுங்கள். பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.