சுக்கிரன், சனி,குரு ஆகிய கிரகங்களால் நன்மை தொடரும். புதன் மார்ச் 21 வரையிலும்,ஏப். 6 க்கு பிறகும் நற்பலன் கொடுப்பார். புதிய முயற்சி வெற்றி பெறும். மங்கள நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். பொருளாதாரம் மேம்படும். சமூக மதிப்பு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். பெண்களின் ஆதரவு பக்கபலமாக அமையும். வீட்டுத்தேவை பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்பு பெருகும். மார்ச் 21க்கு பிறகு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். உடல்நிலை திருப்தியளிக்கும்.
தொழில், வியாபாரத்தில் எதிரி தொல்லை குறுக்கிட்டாலும் திறம்பட சமாளிப்பீர்கள். பண விஷயத்தில் பிற்போக்கான நிலை இருக்காது. மார்ச் 18,19 தேதிகளில் அதிர்ஷ்டவசமாக வருமானம் அதிகரிக்கும்.
பணியாளர்கள் சிறப்பான நிலை காண்பர். மாதத் தொடக்கத்தில் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். கோரிக்கை எளிதில் நிறைவேறும். சிலர் பதவி உயர்வும் பெறுவர். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். மார்ச் 27,28 தேதிகளில் பணியிடத்தில் இனிய அனுபவம் ஏற்படும்.
கலைஞர்களுக்கு வசதி,வாய்ப்பு பெருகும். புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும். அரசு வகையில் பாராட்டு கிடைக்கும்.
அரசியல்வாதிகள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். நல்ல மதிப்பெண் பெறுவர். போட்டிகளில் வெற்றி காணலாம். மார்ச் 21ல் இருந்து ஏப். 6 வரை படிப்பில் கூடுதல் கவனம் தேவை.
விவசாயிகள் நெல், கோதுமை, பழவகைகள், காய்கறிகள், கீரை வகைகள் மூலம் அதிக வருவாய் பெறுவர்.
பெண்கள் அடிக்கடி சுபநிகழ்ச்சியில் பங்கேற்பர். மார்ச் 20,21, ஏப்.8,9 தேதிகளில் விருந்து, விழா என சென்று மகிழ்வர். மார்ச் 21க்கு பிறகு குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். ஏப்.6 க்கு பிறகு ஆடை, அணிகலன் சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
நல்ல நாள்: மார்ச் 18, 19, 20, 21, 27, 28, 29, 30, 31 ஏப். 3, 4, 5, 8, 9
கவன நாள்: மார்ச் 22, 23, 24 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 5, 9 நிறம்: வெள்ளை, மஞ்சள்
வழிபாடு: ஆஞ்சநேயர் வழிபாடு தைரியத்தைக் கொடுக்கும். வெள்ளியன்று காளி அம்மனுக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றுங்கள். முருகனை வழிபட நன்மை வரும்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »