பதிவு செய்த நாள்
24
ஜூன்
2011
11:06
தஞ்சாவூர்: தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கல்யாணசுந்தரி அம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநதார் கோவில் கும்பாபிஷேகம் ஜுன் 29ம் தேதி புதன் காலை 9.40க்கும் மேல் 10 மணிக்குள் சிம்ம லக்னத்தில் நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று 23ம் தேதி காலை 8.30 முதல் 11.30 வரை நவககிரக ஹோமமும், அதை தொடர்ந்து 24ம் காலை எட்டு மணி முதல் 12மணி வரை லட்சுமி ஹோமமும், 25ம் தேதி காலை 8.30 மணி முதல் 11.30 வரை சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமமும், 26ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை ருத்ரா அபிஷேகமும், ப்ரசன்னாபிஷேகமும், மாலை முதல் கால யாக சாலை பூஜையும், 27ம் தேதி காலை 7.15 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை ஐந்து மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. 28ம் தேதி காலை எட்டு மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், ஒன்பது மணிக்கு மகா பூர்ணாஹூதி தீபாரதனையும், 10 மணிக்கு ப்ரதான மூர்த்திகள் அஷ்படந்தன சமர்ப்பணமும், மாலை ஐந்து மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து 29ம் தேதி காலை 5.30 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கி 7.20 மணிக்கு பரிவார யாக சாலை பூர்ணாஹூதி கடம் புறப்பாடு, ஒன்பது மணிக்கு ப்ரதான யாகசாலை பூர்ணாஹூதி கடம் புறப்பாடு, காலை 10 மணிக்கு அனைத்து விமான ராஜ கோபர கலசங்களில் மஹா கும்பாபிஹேகமும், 10.20 மணிக்கு மூலஸ்தான ஸ்ரீ கல்யாணசுந்தரி சமேத ஸ்ரீ கைலாசநாதர் சுவாமிக்கும் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகும் நடக்கிறது. தொடர்ந்து மூலவர் கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா காட்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் உதவி ஆணையர் சிவாஜி, பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, கண்காணிப்பாளர் அசோகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.