கள்ளக்குறிச்சி அங்காளபரமேஸ்வரி கோவில் தேர்த் திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2015 10:03
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் தேர்த் திருவிழா நடந்தது. கள்ளக்குறிச்சி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக்கொள்ளை மற்றும் தேர்த் திருவிழா கடந்த 17ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வீதியுலா, ஊரணி பொங்கல், கோட்டை இடித்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் மயானக் கொள்ளை நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு காளிகோட்டை இடித்தல், தேர் திருவிழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தேரில் எழுந்தருள செய்தனர். பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.